Last updated: 6 Sep, 2021

ஆரோவில்லின் சின்னம்

மத்தியிலுள்ள புள்ளி ஒருமையை, பரம்பொருளைக் குறிக்கிறது;

உள்வட்டம் படைப்பை, நகரத்தின் கருத்துருவைக் குறிக்கிறது;

இதழ்கள் வெளிப்படுத்தும் ஆற்றலை, இலட்சியத்தை நிறைவேற்றும் ஆற்றலைக் குறிக்கின்றன.

1999 ஜூலையில், இந்திய அரசு 'ஆரோவில்' என்ற பெயருக்கும் அதன் சின்னத்திற்கும், சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாட்டைத் தடுத்தல்) சட்டம் 1950 -ன் கீழ் சிறப்புப் பாதுகாப்பை வழங்கியது.